திரையுலகம்,முதன்மை செய்திகள் அதிருப்தி அடைந்த நடிகை…

அதிருப்தி அடைந்த நடிகை…

அதிருப்தி அடைந்த நடிகை… post thumbnail image
அங்காடித்தெருவுக்கு பிறகு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்ற முத்திரையுடன் நடித்து வந்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கத் தொடங்கினார்.

அப்படி அவர் ஆர்யாவுடன் சேட்டை படத்தில் நடித்த பிறகு மேலும் சில படங்களில் கமிட்டாகயிருந்தார். ஆனால், எதிர்பாராதவிதாக அவரது சித்திக்கும், அவருக்குமிடையே சொத்து பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. தன்னை மோசடி செய்வதாக சொல்லிக்கொண்டு ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தார் அஞ்சலி.

அதன்காரணமாக, தமிழில் அவருக்கு கிடைக்கயிருந்த பல படங்கள் மாற்று நடிகைகளுக்கு சென்று விட்டன. குறிப்பாக, சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடிக்க அஞ்சலியிடம் பேசியிருந்தனர்.

அவர் திடீரென ஒரு நாள் மாயமாகி விட்டதால், இவர் சரிப்பட்டு வரமாட்டார். பாதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இப்படி தலைமறைவாகி விட்டால், நம் கதி அதோகதியாகி விடுமே என்று மனீஷாவை புக் பண்ணி படமாக்கினார் சுசீந்திரன்.

அதேபோல், முனி-3 கங்கா படத்தை இயக்கி வரும் லாரன்சும் முதலில் அஞ்சலியை புக் பண்ணி வைத்திருந்தார், ஆனால், அடிக்கடி அமெரிக்காவுக்கு விசிட் அடிக்கும் அவர், அங்கு யாரையோ ரகசிய திருமணம் செய்து வைத்திருப்பதாக செய்திகள் புகைந்து கொண்டிருப்பதால், கடைசி நேரத்தில் அஞ்சலியை ஓரங்கட்டிவிட்டு நித்யாமேனனை புக் பண்ணி விடடார்.

இப்படி வெளியில் தெரிந்து 2 படங்களை இழந்துள்ள அஞ்சலி, வெளியில் தெரியாமலும் பல படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி