செய்திகள்,முதன்மை செய்திகள் டெஸ்ட் டிரைவ் என கூறி புது பைக்குடன் ஓடிய இளைஞர்…

டெஸ்ட் டிரைவ் என கூறி புது பைக்குடன் ஓடிய இளைஞர்…

டெஸ்ட் டிரைவ் என கூறி  புது பைக்குடன் ஓடிய  இளைஞர்… post thumbnail image
அருணாச்சல் மாநில தலைநகரான இடாநகரில், இருசக்கர வாகன விற்பனை நிலையத்திற்கு நேற்று முன்தினம் வண்டி வாங்குவதற்காக ஒரு வாலிபர் வந்துள்ளார். ஒவ்வொரு வண்டியாகப் பார்த்த அந்த வாலிபர், தனக்குப் பிடித்த 180 சிசி திறன் கொண்ட பைக்கை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த வண்டியை ஓட்டிப்பார்ப்பதற்காக கேட்டுள்ளார். உடனே அந்த வாலிபரிடம் வண்டியைக் கொடுத்து ஓட்டச் செய்துள்ளனர். ஷோரூம் ஊழியர் ஒருவர் உடன் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் திரும்பி வந்தனர். அப்போது ஷோரூம் ஊழியரை கீழே இறங்கக் சொன்ன அந்த வாலிபர், கோச்சா சாலையில் இன்னொரு ரவுண்டு சென்று வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரது பேச்சில் நம்பிய ஊழியர் கீழே இறங்கியுள்ளார். ஆனால், வண்டியை ஓட்டிச் சென்ற அந்த வாலிபர் திரும்பி வரவேயில்லை. டெஸ்ட் டிரைவ் என்று கூறி 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வண்டியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபர் தேடி வருகின்றனர்.காணாமல் போன பைக்கைப்பற்றிய தகவல் தெரிவித்தால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று ஷோரூம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி