திரையுலகம்,முதன்மை செய்திகள் மீண்டும் இணையும் ஜோடி…

மீண்டும் இணையும் ஜோடி…

மீண்டும் இணையும் ஜோடி… post thumbnail image

’முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’ ஆகிய படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. தனது அடுத்த படத்தில் ஆர்யாவை இயக்கி வருகிறார். படத்திற்கு ‘மீகாமன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. “படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வருகிறோம். விரைவில் அறிவிப்பு வரும்” என்று தெரிவித்தார் மகிழ்திருமேனி.

இந்நிலையில், ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த டாப்ஸி மீண்டும் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவோடு இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கோவா பின்னணியில் நடைபெறும் ஒரு ஆக்‌ஷன் கதை தான் ‘மீகாமன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி