செய்திகள்,முதன்மை செய்திகள் மகனை கொன்ற தந்தை…

மகனை கொன்ற தந்தை…

மகனை கொன்ற தந்தை… post thumbnail image
மதுரை ஆரப்பாளையம் படித்துறையைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் ஆனந்த் (வயது 26). இவர் திருமணமாகி மேலப்பொன்னகரத்தில் வசித்து வந்தார். இவர் மது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருந்தார்.

இதனால் அவரிடமிருந்து சண்டை போட்டுக்கொண்டு மனைவி தமிழ்ச்செல்வி பிரிந்து சென்றுவிட்டார்.இதற்கிடையே ஆனந்த் மது அருந்திவிட்டு தனது தந்தை ஞானசேகரனிடம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு தகராறு செய்துள்ளார். இரவிலும் போதையில் வந்த ஆனந்த் வழக்கம்போல பிரச்சினையில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் ராமர், மணி ஆகியோர் சேர்ந்து ஆனந்தை தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி