கமலை பிரிந்தமகள் …

கமலை பிரிந்தமகள் … post thumbnail image
எந்த பிரச்னையும இல்லாமல்தான் இருந்து வந்தார் ஸ்ருதிஹாசன. அவர் யார் துணையும் இல்லாமல் தனித்து தங்கியிருந்த வீட்டிற்குள் மர்ம மனிதன் புகுந்து தாக்கியதை அடுத்து இப்போது அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு ஏரியாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இப்போது மும்பையிலுள்ள பாந்த்ரா பகுதியில் பாதுகாப்பான இடத்தில் வீடு பார்த்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

பாலிவுட் சினிமா சம்பந்தப்பட்ட மேனேஜர்கள், இயக்குனர்கள் என அனைவரது நேரடி தொடர்பில் இருந்து வந்தார் ஸ்ருதி. இப்போது அந்த நிலை அடியோடு மாறி விட்டது. சினிமா சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவரது தாயார் சரிகாவிடம்தான் முதலில் தொடர்பு கொள்ள வேண்டும். அதன்பிறகு அவர் ஸ்ருதியிடம் பேச வைப்பாராம்.

இதுவரை ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட சினிமா விசயங்களில் தலையிடாமல் இருந்த சரிகா, இனி கதை கேட்பது முதல் சம்பள பேசுவது வரை முக்கிய பங்கு வகிக்கப்போகிறாராம். கிட்டத்தட்ட அவரது கால்சீட் மேனேஜர் போலாகி விட்டார். ஆக, இப்போது அம்மாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் முழுமையாக வந்து விட்டார் ஸ்ருதி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி