செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கத்திரி வைக்கப்படும் சந்தானம்…

கத்திரி வைக்கப்படும் சந்தானம்…

கத்திரி வைக்கப்படும்  சந்தானம்… post thumbnail image
சமீபகாலமாக சந்தானம் நடிக்கும் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் ஜாஸ்தியாக இடம்பெறுகிறது.
ஆரம்பத்தில் இதை கண்டும் காணாததும் போல இருந்து வந்த சென்சார்போர்டு, இப்போது படத்துக்குப்படம் அவரது ஆபாச எல்லை அதிகரித்துக்கொண்டே செல்வதால், சந்தானம் நடித்த படம் பார்வைக்கு வருகிறது என்றாலே ஆளாலுக்கு கத்தரிக்கோலும் கையுமாகத்தான் திரிகிறார்களாம்.

இதனால் ஒரு படத்திற்கான மொத்த காமெடி டயலாக்கையும் எழுதி கொடுப்பவர்கள் அவர் பாதியை டெலிட் செய்து விடுவதால் மீண்டும் மீண்டும் டயலாக் எழுதும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்களாம். கவுண்டமணி, வடிவேலு போன்ற மெகா காமெடியன்கள் ரீ-என்ட்ரியாகி இருக்கும் இந்த நேரத்தில் தன்னிடமிருந்த காமெடி சரக்கு சரியாக வெளியாகாமல் போனால் தனது மார்க்கெட் கவிழ்ந்து விடுமே என சந்தானம் பயப்பட ஆரம்பித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி