செய்திகள்,முதன்மை செய்திகள் பட்டாசு ஆலையில் விபத்து ஒருவர் பலி …

பட்டாசு ஆலையில் விபத்து ஒருவர் பலி …

பட்டாசு ஆலையில்  விபத்து ஒருவர் பலி … post thumbnail image
நெல்லை மாவட்டம், வள்ளியூரை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் பெருமாள் (40). இவர் அங்குள்ள மின்வாரிய காலனியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார். மேலும், பல்வேறு இடங்களில் நடக்கும் விழாக்களுக்கு பட்டாசு மற்றும் மத்தாப்புகள் செய்து கொடுத்து வந்தார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக, விஜயநாராயணம் பகுதியில் அனுமதி பெறாமல் இவர் பட்டாசு தயாரித்து விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக நாங்குநேரி அருகேயுள்ள காரியாண்டி கிராமத்தில் திருட்டுத்தனமாக பட்டாசுகள் தயாரிக்கும் பணியை பெருமாள் மேற்கொண்டு வந்தார்.

நேற்று மதியம் பெருமாள் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின.இதில் சிக்கிய பெருமாள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.பட்டாசு வெடித்ததில் வீட்டின் முன்புற சுற்றுச்சுவர் மற்றும் கூரை, அருகிலுள்ள ஒரு வீடு ஆகியவை சேதமடைந்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி