செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் விண்ணில் பறக்கும் இந்திய ஆராய்ச்சி….

விண்ணில் பறக்கும் இந்திய ஆராய்ச்சி….

விண்ணில் பறக்கும் இந்திய ஆராய்ச்சி…. post thumbnail image

மூன்று நிலைகளை கொண்ட ராக்கெட்:-

ஜி.எல்.எல்.வி ராக்கெட் 3 நிலைகளை கொண்டது. 414 டன் எடையும், 49 மீட்டர் உயரம் உடையது. ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் கடந்த ஆகஸ்டு 19-ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஏவப்படுவதற்கு 75 நிமிடங்களுக்கு முன்பு ராக்கெட்டின் 2-வது தளத்தில் உள்ள உந்துவிசை டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராக்கெட் செலுத்துவது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.அதில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. அதையடுத்து இந்த ராக்கெட் வருகிற ஜனவரி 5-ந்தேதி மாலை 4.18 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவானின் 2 தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.இத்துடன் ஜிசாட்-14 தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் அனுப்பப்படுகிறது. ஜி.எல்.எல்.வி.- டி5 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட்டை இயக்கும் கிரயோஜெனிக் என்ஜின் இந்திய விஞ்ஞானிகள்உருவாக்கியுள்ளனர்.இந்த தகவலை இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர்-27ல் – வெளியீடு:

ராதாகிருஷ்ணன் மேலும் அவர் கூறுகையில், இந்த ராக்கெட் அனுப்பும் குழு வருகிற 27-ந்தேதி சந்தித்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அறிவிப்பை அதிகாரமாக வெளியிடுவார்கள் என்றும், ஜி.எஸ்.எல்.வி.- 5டி ராக்கெட் பரிசோதனை முழுமையாக முடிந்து விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்தபோது அவருடன் இஸ்ரோ செய்தி தொடர்பாளர் தேவிபிரசாத் கார்னிக் உடன் இருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி