விளையாட்டு ஐ.நா. பாராட்டிய இந்திய வீரர்கள்…

ஐ.நா. பாராட்டிய இந்திய வீரர்கள்…

ஐ.நா. பாராட்டிய இந்திய வீரர்கள்… post thumbnail image
தெற்கு சூடானிலுள்ள ஐ.நா. முகாம் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலின்போது இந்திய அமைதிப்படையினர் வீரத்துடன் போராடியதால் அதிக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ஹில்டோ ஜான்சன் பாராட்டியுள்ளார்.

தெற்கு சூடானின் ஜோங்லீ மாகாணம் அகோபோ நகரிலுள்ள ஐ.நா. முகாம் மீது சுமார் 2 ஆயிரம் கிளர்ச்சியாளர்கள் கடந்த வியாழன் அன்று தாக்குதல் நடத்தினர்.அப்போது நடந்த சண்டையில் ஐ.நா. அமைதிப்படையில் இந்திய வீரர்களான தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள். மற்றொரு இந்திய வீரரான மண்டல் ஷாபுலுக்கு மார்பில் காயம் ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி