திரையுலகம்,முதன்மை செய்திகள் சாக்கடையில் விழுந்த ஹீரோ …

சாக்கடையில் விழுந்த ஹீரோ …

சாக்கடையில் விழுந்த ஹீரோ … post thumbnail image
நிமிர்ந்து நில் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜெயமரவியின் கேரக்டர்கள் ரொம்பவே வித்தியாசமானவை என்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. ‘ஒன்று நல்லவன். அடுத்தது இன்னும் நல்லவன்’.

சாந்த சொரூபி. ஒழுக்கமானவன். குருகுலத்தில் படித்தவன். இப்படிப்பட்ட இளைஞன் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை ஒரு கட்டத்தில் தட்டிக் கேட்கத் தொடங்குகிறான். அதன்பிறகே அதுவரை வளைந்து கிடந்த பல முதுகுகள் நிமிர்ந்து நிற்கின்றன என்பதை விறுப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறாராம் சமுத்திரக்கனி.ஒரு காட்சியில் ‘சாக்கடையில் விழு’ என்று சொல்லி முடிப்பதற்குள் விழுந்து அதிர வைத்திருக்கிறார் ஜெயம்ரவி.

நாயகி அமலாபால்கூட சற்றே எட்டத்தில் நின்று மூக்கை பிடித்தபடி ‘‘இப்படி பாதுகாப்பில்லாமல் விழலாமா ரவி?” என்று அக்கறையாய் கேட்க, அதற்கு ஜெயம் ரவியின் பதில் என்ன தெரியுமா? ‘‘இயக்குநர் சொன்னப்புறம் யோசிச்சிக்கிட்டிருந்தா தப்பாயிடும்!”என்று கூறினாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி