திரையுலகம் எந்திரன் 2 இல்லையென்றால் சிவாஜி 2….

எந்திரன் 2 இல்லையென்றால் சிவாஜி 2….

எந்திரன் 2 இல்லையென்றால் சிவாஜி 2…. post thumbnail image
இந்த செய்தி உண்மையா இல்லை வதந்தியா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். கோச்சடையான் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்த ரஜினி, அதற்கான கதையை தயார் செய்யுமாறு ஷங்கரிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது கோச்சடையான் படத்தின் வேலைகளை முடித்துவிட்டார்.

அடுத்ததாக அவர் ஈராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்குத்தான் படம் பண்ணுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் கல்பாத்தி அகோரத்தின் AGS ரஜினிக்கு எவ்வளவு கொடுத்தாவது தங்கள் நிறுவனத்துக்காக ஒரு படம் தயாரிக்க காத்திருக்கிறது. தயாரிப்பாளர் யார் என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம், முதலில் இயக்குநரைத் தீர்மானிக்கலாம் என முடிவு செய்த ரஜினி, உடனடியாக ஷங்கரைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஐ பட வேலைகள் குறித்து வெகுவாக விசாரித்த ரஜினி, அது டிசம்பருக்குள் முடிந்துவிடும் என்பதைத் அறிந்து கொண்டு, தனக்காக ஒரு கதையைத் தயார் செய்யுமாறு கூறினாராம் இயக்குனர் ஷங்கருக்கு ரொம்பவே ஆனந்த அதிர்ச்சியாகிவிட்டதாம் அதற்கு காரணம் நண்பன் முடிந்த பிறகு ரஜினியை மீண்டும் இயக்கக் நினைத்து இருந்தார் ஷங்கர். ஆனால் ரஜினியின் உடல்நிலை, கோச்சடையான் படம் ஏற்படுத்திய இடைவெளி போன்றவை காரணமாக, ஐ படத்தை ஆரம்பித்துவிட்டார்.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி