திரையுலகம் அஜீத்தை அப்செட் செய்த பெங்களூரு

அஜீத்தை அப்செட் செய்த பெங்களூரு

அஜீத்தை அப்செட் செய்த பெங்களூரு post thumbnail image
Tamil Actor Ajith

காணொளி:-

ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார் தல அஜீத் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாகி உள்ளார் நயன்தாரா இவர்களுடன் ஆர்யா,டாப்ஸி, சுமன் ரங்கநாதன் என்று ஒரு பெரிய பட்டாளமே நடிக்கின்றனர்.

பெங்களூரு கருடா மால் அருகே, ஒரு வீட்டில் படப்பிடிப்பை துவக்கினர் அஜித், நயன்தாரா வந்த தகவல் பரவியது அவ்வளவு தான் அவர்களை பார்க்க ரசிகர்கள் கூடினர். படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள், ரசிகர்கள் செல்ல முற்பட்டனர். இதனால், செக்யூரிட்டிகளுக்கும், ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த ரசிகர்கள் அங்கிருந்த இரண்டு கார் கண்ணாடிகளை, ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.

படப்பிடிப்பு முடிந்து, தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற போது, அஜித்தின் காருக்கு, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதனால், மறு நாள் லொக்கேஷன், பெங்களூரு வெளிப்பகுதியான ஹெண்ணூருக்கு மாற்றப்பட்டது.

அங்குள்ள பழமை வாய்ந்த சர்ச்சில், படப்பிடிப்பு ஆரம்பமானது. அங்கும், ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனாலும் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது. அஜீத்தை பார்க்க விடாத போலீசாருடன், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம், படப்பிடிப்பு முடிந்த அஜித், காரில் வரும் போது, அவரை பார்க்க வேண்டுமென, அவரது ரசிகர்கள் இருவர், பைக்கில் துரத்தி வந்தனர்.

ரிங்ரோட்டில் வரும் போது, அஜித்தின் காரை, “ஓவர் டேக்’ செய்து, அவரை பார்க்க முற்பட்ட ரசிகர்கள், நிலை தடுமாறி, அஜித் கார் முன், பைக்குடன் விழுந்தனர். அஜித் கார், உடனடியாக பிரேக் போட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், கோபமடைந்த அஜீத் பெங்களூருவில் படப்பிடிப்பு வேண்டாம். வேறு இடம் பார்த்து கூறுங்கள்; வருகிறேன்’ என கூறி, சென்னை வந்து விட்டார்.[rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.