திரையுலகம்,முதன்மை செய்திகள் கோடம்பக்கத்தில் ஒரு கூத்து…

கோடம்பக்கத்தில் ஒரு கூத்து…

Tamil film producers

சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரால் உயிருக்கு ஆபத்து என்று முறையிட்டு காவல்துறையில் பாதுகாப்பு கோரியுள்ளனர்.

இதுபற்றி சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹிம் ராவுத்தர் மாநகர காவல் ஆணையர் திரிபாதியிடம் கொடுத்துள்ள மனுவில் ” ஃபெப்சி, சினிமா தயாரிப்பாளர்களிடையே நடந்த பிரச்னையில் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக எஸ்.ஏ.சந்திர சேகரன், தேனப்பன், கலைப்புலி தாணு ஆகியோரை 6 மாத காலத்திற்கு நீக்கியுள்ளோம்.

இந்நிலையில் இடைக்கால தலைவராக என்னை (இப்ராஹிம் ராவுத்தர்) உறுப்பினர்கள் நியமித்துள்ளனர். 3 பேரை நீக்கியதால், எங்கள் உறுப்பினர்களுக்கு அடியாட்கள் மூலம் ஆபத்து வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே எங்கள் உறுப்பினர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் தான் 3 பேரும் நீக்கப்பட்டுள்ளார்கள். அதற்கான அதிகாரம் இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் “. இவ்வாறு இப்ராஹிம் ராவுத்தர் தனது மனுவில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி