திரையுலகம் ரஜினிக்கு வந்த சோதனை…

ரஜினிக்கு வந்த சோதனை…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக மூடு அவுட்டான நடிகர் ரஜினிகாந்த், லண்டனில் நடந்த சூட்டிங்கை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற நீண்டநாள் ஓய்வில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இப்போது தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங்கிற்காக கடந்த 17ம் தேதி ரஜினி, சவுந்தர்யா, சரத்குமார் உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர் லண்டன் புறப்பட்டு சென்றனர். அங்கு விறுவிறுப்பாக சூட்டிங் நடந்து வந்தது. நேற்று கூட ரஜினி, சவுந்தர்யா உள்ளிட்ட கோச்சடையான படக்குழுவினர் இப்படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து பேட்டியளித்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், லண்டனில் நடந்த சூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக இன்று காலை சென்னை திரும்பியுள்ளார்.

இதுபற்றி விசாரித்த போது ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இடையே தங்களது படங்களான 3 மற்றும் கோச்சடையான படங்களை புரோமஷனல் செய்வதில் பிரச்னை உருவாகி இருப்பதாகவும், இதனால் அப்செட்டான ரஜினி சூட்டிங்கை ரத்து செய்து சென்னை திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி