திரையுலகம் ‘பப், டிஸ்கொதே’ பார்ட்டிகளில் ஒலிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள்…

‘பப், டிஸ்கொதே’ பார்ட்டிகளில் ஒலிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

இந்திய சினிமாவில் இசைஞானமிக்க நடிகரான கமல்ஹாசனுடன் ‘மன்மதன் அம்பு’ படத்துக்காக பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ளார்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.கமலின் கவிதைக்கு இப்படி எதிர்ப்பு கிளம்பும் என அவர் எதிர்பார்க்கலையாம்.

உலகநாயகன் தனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அந்த கவிதைகளை வடித்துள்ளார்.

பாடலுக்கு இசையமைப்பதை விட, கவிதைக்கு பொருத்தமான இசை தருவது கடினமானது. அதை நான் நன்றாக, எளிதாக பண்ணியதை அவர் சொல்லியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. என் இசையில் வெளியான பாடல்கள் ரிங் டோனாகவும், ‘பப், டிஸ்கொதே, பார்ட்டிகளில்’ ஒலிக்கும் போது உற்சாகமடைவேன்.

நான் பாடலுக்கு வெறி கொண்டு ஆட்டம் போட்டால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு குஷியாகிவிடும். படத்தில் ஹீரோவாக நடிப்பது பற்றி யோசித்து வருகிறேன் என்கிறார் டிஎஸ்பி.குளிர்கால விடுமுறையை கழிக்க நியுயார்க் பக்கம் ஒதுங்கப்போகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி