திரையுலகம் தனுஷின் டப்பிங்…தப்பிங் ஆன கதை…

தனுஷின் டப்பிங்…தப்பிங் ஆன கதை…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

மாப்பிள்ளை ஆடு மேய்க்கிறவராக இருந்தால் கூட அவருக்கும் புழுக்கை அளவுக்கு கோபம் வரும். ஏனென்றால் அதுதான் மாப்பிள்ளை முறுக்கு! யதார்த்தம் இப்படியிருப்பதால் தெரிந்தேதான் பெயர் வைத்திருக்கிறார்கள் மாப்பிள்ளை என்று! இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ், இப்படத்திற்கும், தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்குக்கும் கொடுத்துவரும் இம்சைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

எப்படியோ படத்தை முடித்து டப்பிங் வரைக்கும் வந்துவிட்டார்கள். இந்த நேரத்திலும் தனது முறுக்கை தளர்த்தவில்லை தனுஷ். கடந்த சில தினங்களுக்கு முன் டப்பிங் பேசப் போனவர் கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டாராம்.

கடித்த இடத்திலேயே கடி விழுந்தால் தழும்பு வரும். இல்லையென்றால் அந்த இடமே தடித்துப் போகும். அப்படிதான் ஆனது டைரக்டர் சுராஜுக்கும். போனால் போகட்டும் போங்கய்யா என்று கூறிவிட்டாராம். பின்னாலேயே ஓடி வந்து சமாதானம் செய்வார் என்று காத்திருந்த தனுஷுக்கு பேரதிர்ச்சி. அதைவிட பேரதிர்ச்சியும் நடந்தது அப்புறம். தனுஷுக்கு பதிலாக சுராஜே டப்பிங் கொடுக்க ஆரம்பித்தார்.

ஐயய்யோ… இது டப்பிங் இல்ல. ரொம்ப தப்பிங்! உடனே தடுத்தாக வேண்டும் என்று ஓடிவந்த தனுஷ், தானே பேசினாராம் அப்புறம்! ஆடிக் கறக்கறதெல்லாம் அந்த காலம் சாமீய்…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி