திரையுலகம் சூர்யாவிற்கு வந்த வாழ்வு…

சூர்யாவிற்கு வந்த வாழ்வு…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

த்ரி இடியட்ஸ் ரீமேக்கில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு ஷங்கர் சென்ற முதல் இடம் சூர்யா வீடு தான்.
அவரின் நம்பிக்கையம் சூர்யா தான். இயக்குனர் ஷங்கரின் படம் என்றாலே அதில் நடிக்க அனைவருக்குமே ஆசை வருமே.

அப்படித்தான், ஷங்கர் இயக்கத்தில் நடிக்க சந்தோஷமாக ஓ.கே சொன்னார் சூர்யா. ஆனால், அதன் பின்னர் சூர்யா கூறிய இரு விஷயங்கள் தான் ஷங்கரை சற்று கலங்க வைத்ததாம்.

நம்பர் ஒன்- உடனே என்னால் கால்ஷீட் தர முடியாது. நம்பர் டூ- நான் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்றால் தெலுங்கிலும் இந்த கதாபாத்திரத்தில் நானே நடிக்கனும் என்றாராம்.

அங்குதான் குழம்பி போய் உள்ளார் ஷங்கர். இதற்கு முன்பு, சூர்யா நடித்த படங்கள் ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆன காரணத்தால், ஆந்திராவிலும் தன் சக்தியை காட்ட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போல சூர்யாவிற்கு.

ஆனால், ஆந்திராவில் அந்த கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு என்ற பெரிய ஹீரோவை நடிக்க வைக்க விரும்பி, அவருக்கு பெரிய அட்வான்சையும் கொடுத்திருக்கிறது ஜெமினி லேப்.

இந்த நேரத்தில் மகேஷ்பாபு வேண்டாம் என்றால் கூட பரவாயில்லை. கொடுத்த அட்வான்சை எப்படி திருப்பி வாங்குவது? என்ற கேள்விக்கு, “யோசிச்சு சொல்லுங்க” என்று சொல்லியனுப்பியிருக்கிறாராம் நடிகர் சூர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி