திரையுலகம் இன்று பத்திரிகையாளர்களிடம் வசமாய் சிக்க போகும் பிரபுதேவா

இன்று பத்திரிகையாளர்களிடம் வசமாய் சிக்க போகும் பிரபுதேவா

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

எங்காவது விழாக்களுக்கு வந்தால் கூட பத்திரிகையாளர்கள் பக்கமே திரும்பாமல் அப்படியே எஸ்கேப் ஆகிவிடுவது பிரபுதேவாவின் வழக்கம். கண்ணோடு கண் நோக்கினால் நயன்தாராவை பற்றி பேசி ரணகளப்படுத்தி விடுவார்களே என்ற அச்சம்தான் இந்த பாராமுகத்திற்கு காரணம். ஆனால் எத்தனை நாளைக்கு இப்படி ஒட முடியும்? வசமாய் சிக்கியது வரிக்குதிரை!

தான் இயக்கிய ‘எங்கேயும் காதல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை கூட பெரிய அளவில் வைக்க வேண்டாம். வெளியிடுவது போல ஒரு போட்டோ மட்டும் போதும் என்று ஜகஜ்ஜாலம் காட்டிய பிரபுதேவாவிடம், “பிரஸ்செல்லாம் கோவமா இருக்காங்க” என்று போட்டுக் கொடுக்கப்பட்டதாம். அதனால் சந்தித்துவிடுவது என்ற வீராவேசத்துக்கு வந்துவிட்டார்.

இன்று சென்னையில் நடைபெறுகிறது பிரபுதேவாவின் ஸ்பெஷல் பிரஸ்மீட். இது போன்ற பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்யும் பிஆர்ஓ க்களில் சிலர், பிரச்சனைக்குரிய கேள்வி கேட்கும் நிருபர்களிடம் “அண்ணே… கேள்விய ஃபோர்சா கேட்டுற வேணாம். கொஞ்சம் மைல்டா கேளுங்க” என்று முன் கூட்டியே கோரிக்கை வைப்பார்கள். அல்லது “பர்சனல் கேள்விகளை தவிர்க்கவும்” என்பார்கள். இன்றும் அதுதான் நடக்கும் போலிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி