திரையுலகம் விக்ரமால் அரண்டு போயிருக்கும் அமலா பால்

விக்ரமால் அரண்டு போயிருக்கும் அமலா பால்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

ராவணன் என்ற ஒரே படம். விக்ரமின் உடம்பு முழுக்க தாயத்து கட்டினாலும் போகவே போகாத அளவுக்கு தோல்வி பயத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்கப் போகும் அடுத்த படத்திற்கு டைரக்டர்களையும், ஹீரோயின்களையும் தேர்வு செய்வதற்கு பட்ட பாடு இருக்கிறதே, அதை தனியாக ஒரு நாவலாகவே எழுதலாம். இந்த நேரத்தில் மேலும் மேலும் அவர் தன்னையும் குழப்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்பி வருவதாக முணுமுணுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கடந்த வாரம் குன்னூரில் நடித்துக் கொண்டிருந்தார் விக்ரம். இப்படத்தின் டைரக்டர் மதராசப்பட்டினம் விஜய். திடீரென்று மணிரத்னம் அழைத்தார் என்பதற்காக கோவாவுக்கு போய்விட்டாராம். ஒரு முன்னணி ஹீரோ இல்லாமல் அத்தனை பேரும் குன்னூரில் இருந்து கொண்டு என்ன செய்துவிட முடியும்? விக்ரம் வருகைக்காக காத்திருந்தவர்கள் அப்புறம் ஒரு வழியாக அவர் வந்த பின் படப்பிடிப்பை தொடர்கிறார்கள்.

விஜய் படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கப் போகும் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதாக உறுதியளித்து அதில் தன்னுடன் நடிக்க அமலாவையும் ரெகமண்ட் செய்த விக்ரம், அங்கேயும் உரியடிக்க ஆரம்பித்திருக்கிறாராம். சுசீந்திரனிடம், “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. யோசிக்கணும்” என்று கூறிவிட்டாராம். இதனால் அரண்டு போயிருப்பது சுசீந்திரன் அல்ல, அமலா!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி