திரையுலகம் ஜோடி இல்லாததால் சசிகுமாருக்கு கிடைத்த அனுபவம்

ஜோடி இல்லாததால் சசிகுமாருக்கு கிடைத்த அனுபவம்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

‘ஜோடி இல்லாததால் இரவு விடுதியில் நுழைய தனக்கு தடை விதித்தனர்’ என்கிறார் இயக்குனர் சசிகுமார். அவர் கூறியது: ‘ஈசன்’ படக் கதை இரவு விடுதிகள் பின்னணியில் உருவானது. அப்படம் தொடங்குவதற்கு முன்வரை இரவு விடுதிக்கு சென்றதே இல்லை. நேரடி அனுபவம் இருந்தால் உதவியாக இருக்கும் என்று எண்ணி நான், சமுத்திரக்கனி, கேமராமேன் கார்த்திக் ஆகியோர் நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருக்கும் விடுதிக்கு சென்றோம். அங்கிருந்த செக்யூரிட்டி, தடுத்து நிறுத்தினார். காதலி அல்லது பெண் ஜோடியோடு வந்தால்தான் விடுதிக்குள் போக முடியும் என்றார். இது எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

மற்றொரு விடுதியை தேடிச் சென்றோம். இரவு 11 மணிவரை அங்கிருந்தோம். ஆனால் பார்ட்டி எதுவும் நடக்கவில்லை. நள்ளிரவில்தான் ஆட்டம் தொடங்கும் என கேள்விப்பட்டதால் காத்திருந்தோம். அப்போது அங்கு வந்த வெயிட்டர், ‘டைமாகிவிட்டது விடுதியை மூடப் போகிறோம். புறப்படுகிறீர்களா?’ என்றார். ‘பார்ட்டி எதுவும் நடக்காதா?’ என்றோம். ‘பார்ட்டியெல்லாம் வெள்ளி, சனிதான் நடக்கும். ஞாயிறுகிடையாது’ என்றார். இது கூட ஒரு அனுபவமாக அமைந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி