திரையுலகம் சூர்யா கேட்ட செல்வராகவனின் கதை

சூர்யா கேட்ட செல்வராகவனின் கதை

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

தன்னுடைய பிரச்சனைகள் எல்லாவற்றையும் தன் உழைப்பால் விரட்டியடிப்பார் போலிருக்கிறது செல்வராகவன் பரபரப்பான திரைக்கதையுடன், படபடப்பான ஒரு கதையை தயாரித்துக் கொண்டு சென்றாராம் சூர்யாவிடம்.

முழு கதையையும் கேட்ட சூர்யா, ஆஹா ஓஹோ என்றாராம்! “கண்டிப்பா இந்த கதையை நாம சேர்ந்து பண்ணுறோம். ஆனால் அதுக்கு முன்னாடி ஸ்கிரிப்டின் முழு பைண்டிங் காப்பியும் தயார் பண்ணிட்டீங்கன்னா சந்தோஷப்படுவேன்” என்று சொல்ல, பேனாவும் பேப்பருமாக உட்கார்ந்து விட்டார் செல்வா.

கதையை கேட்டு கவுரமாக அனுப்பி வைத்ததோடு இல்லாமல், இந்த கதையை அப்படியே தன் ஆஸ்தான இயக்குனர் கே.வி.ஆனந்திடமும் சொன்னாராம் சூர்யா. அவரும் “இந்த கதையில் நீங்க நடிச்சா பெரிய பேர் கிடைக்கும். படமும் பெரிய ஹிட் ஆகும்” என்று கூற, எப்படியாவது முந்தைய கமிட்மென்டுகளை முடித்துவிட்டு செல்வாவுடன் கரம் கோர்ப்பதென்று தயார் நிலையில் இருக்கிறாராம் சூர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி