திரையுலகம் விஜய்யிடம் கதை சொல்ல போய் எஸ்.ஏ.சியிடம் சிக்கிய அமீர்

விஜய்யிடம் கதை சொல்ல போய் எஸ்.ஏ.சியிடம் சிக்கிய அமீர்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படம் கிட்டதட்ட முடியும் நிலையில் இருக்கிறது. இதற்கு பிறகு அவர் இயக்கப் போகும் படம் கண்ணபிரான்தான் என்கிறார்கள். ஆனால் இடையில் ஒரு படத்தில் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறாராம்.மீண்டும் நடிக்க வேண்டும் என்பதில் விருப்பம் இல்லாமல் இருந்த அமீர், அழைத்தவர் முக்கியமானவர் என்பதால் சரி என்று சம்மதித்திருக்கிறார்.

அப்படி அவர் சம்மதித்தது கிவ் அண்டு டேக் பாலிசியாக கூட இருக்கலாம் என்கிறார்கள். விஜய்க்கு கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் அமீரை, நான் இயக்குகிற படத்தில் ஹீரோவாக நடிங்களேன் என்று அழைத்தாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்குகிற படங்களுக்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். மளமளவென்று எடுத்து முடித்துவிடுவார்.அந்த நம்பிக்கையில் சரி என்று சொல்லியிருக்கிறாராம் அமீர். ஜனவரி முதல் தேதியிலிருந்து படப்பிடிப்புக்கு கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி