திரையுலகம் “வம்சம்” அருள்நிதி இயக்குனர் பிரியதர்ஷனை நம்பி இரண்டாவது முயற்சி

“வம்சம்” அருள்நிதி இயக்குனர் பிரியதர்ஷனை நம்பி இரண்டாவது முயற்சி

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

வம்சம் படத்தில் அறிமுகமான அருள்நிதி அடுத்த படத்தை முடிவு செய்வதில் தாமதம் செய்து கொண்டிருந்தார். முதல் படத்தின் வெற்றி நினைத்த மாதிரி அமையவில்லையே என்பதால்தான் இந்த தயக்கம். இடையில் ஈரம் பட இயக்குனர் அறிவழகனின் கதையை தேர்வு செய்திருந்தார்.

இப்போது அதற்கும் இழுபறி. கால தாமதம் ஆனாலும் கடைசியில் மிக சரியான ஒரு இயக்குனரை இவர் பார்த்திருப்பதுதான் விசேஷம். பிரபல இந்திப்பட இயக்குனர் பிரியதர்ஷன்தான் அருள்நிதியை இயக்கப் போகிறாராம். இந்த படத்தை அருள்நிதியின் அப்பா மு.க.தமிழரசுவே தயாரிக்கப் போகிறார்.

அதுவும் கோபுர வாசலிலே என்ற படத்தை தயாரித்த மோகனா பிலிம்ஸ் பேனரில். அந்த படம் வெளிவந்து பல வருடங்கள் ஆன நிலையில் சென்ட்டிமென்ட்டாக அதே நிறுவனத்தின் பெயரில் இந்த படத்தை தயாரிக்கலாமே என்ற ஆசை வந்திருக்கிறதாம் அவருக்கு. இளையராஜாவின் இசையையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவையும் பக்க பலமாக வைத்திருக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி