திரையுலகம் நடிகை குட்டிராதிகா கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மனைவி!!!

நடிகை குட்டிராதிகா கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மனைவி!!!

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

கடந்த ஐந்தாண்டுகளாக கர்நாடகாவை வலம் வந்த ஒரு ஊகச் செய்தி இன்றைக்கு நிஜமாகியிருக்கிறது. கர்நாடகாவில் கடந்த 2007-2007 ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்த குமாரசாமிக்கும், தமிழில் வெளிவந்த இயற்கை என்ற படத்தில் நாயகியாக நடித்த குட்டிராதிகாவும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடகம் முழுக்கவே பல்வேறு வதந்திகள், செய்திகள் பரவியிருந்தன.

இதனை குமாரசாமியும், குட்டிராதிகாவும் ஏற்கெனவே மறுத்து வந்தனர். ஆனாலும் ஒரு நாள் உண்மை வெளியாகித்தானே ஆக வேண்டும். இப்போது வெளியாகிவிட்டது. குமாரசாமியுடனான தொடர்பில் தனக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும் உண்டு என்று ஒத்துக் கொண்டிருக்கிறார் நடிகை குட்டி ராதிகா.

ஜனநாதன் இயக்கிய, ஷாம் நடித்த இயற்கை படத்தில் நாயகியாக அறிமுகமானவர் குட்டி ராதிகா. அதன்
பின் வர்ணஜாலம் என்ற தமிழ்ப் படத்தில் நடித்த கையோடு, மலையாளம், கன்னடப் படங்களில் பிஸியாகிவிட்டார் குட்டி ராதிகா.

அப்போதுதான் முதல்வராக இருந்த குமாரசாமியுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் வருமான வரித்துறையினர் குட்டி ராதிகாவின் வீட்டில் சோதனை நடத்தியதில் 9 கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாகவே கைப்பற்றினார்கள். இதன் பின்புதான் குமாரசாமிக்கும், ராதிகாவுக்குமான தொடர்பு வெட்ட வெளிச்சமானது.

தற்போது 51 வயதாகும் குமாரசாமிக்கு ஏற்கெனவே திருமணமாகி அனிதா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். அனிதா சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த நிலையில் அவரது இந்த இரண்டாவது திருமணச் செய்தி அவரது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால்தான் இதுவரையில் வெளியில் சொல்லாமல் இருந்ததாகவும் ராதிகா கூறியுள்ளார்.

கன்னட நாளிதழ் ஒன்றுக்கு இப்போது அவர் அளித்துள்ள பேட்டியில்தான் முதல்முறையாக இது பற்றிக் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டி வருமாறு :

’’நானும் அவரும்(குமாரசாமி) திருமணம் செய்து கொண்டது நூற்றுக்கு நூறு உண்மை. நான்கு வருடங்களுக்கு முன்பு எங்களது திருமணம் நடந்தது. எனக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த மாதம் 23-ஆம் தேதியுடன் குழந்தைக்கு ஒரு வருடம் நிறைவடைய உள்ளது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

எனக்கு திருமணம் ஆன உடனேயே நான் லண்டன் சென்று சில காலம் தங்கிவிட்டு பின்புதான் இங்கே வந்தேன். அவ்வப்போது அவர் லண்டனுக்கே வந்து சென்றார். ஆனால் எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதில் உண்மை இல்லை.

நான் இந்தியா திரும்பிய பிறகு பெங்களூர் மற்றும் மங்களூரை விட்டு எங்கும் செல்லவில்லை. மேலும் எனக்கு திருமணம் நடந்த சமயம் மிகவும் சிக்கலான நேரம் என்ற காரணத்தால் நானே திரையுலகில் இருந்து விலகியும் இருந்தேன்.

என்னால் அவருக்கு தொந்தரவு வரக் கூடாது என்பதே என் நோக்கம். எங்களது திருமணத்துக்கு அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. வரும் சூழ்நிலையும் இல்லை. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும் திரையுலகிற்கு வர விரும்பினேன். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. ‘நடிக்க வேண்டாம். படம் தயாரிக்கலாம்’ என்று கூறிவிட்டார். எனவே படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளேன். ஒரு நல்ல கதை கிடைத்தால் அதில் நானும் நடிக்க தயாராக உள்ளேன். குழந்தைக்கு ஷமிகா கே. சாமி என்று பெயரிட்டுள்ளேன்’’

இவ்வாறு தனது பேட்டியில் குட்டி ராதிகா என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி