திரையுலகம் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் – ஐஸ்வர்யா ராய்

கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் – ஐஸ்வர்யா ராய்

aishwarya rai

எனக்கு தொடர்ந்து நல்ல கேரக்டர்களும், ரோல்களும் கிடைப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அழகி ஐஸ்வர்யா ராய்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்குத்தொடர்ந்து நல்ல படங்களும், ரோல்களும், கேரக்டர்களும் கிடைக்கின்றன. இதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

குறிப்பாக நல்ல கேரக்டர்களைக் கொண்ட பீரியட் படங்கள் சரியான இடைவெளியில் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சி தருகிறது. அதுபோன்ற படங்களில் பழைய நடிகைகள் யாரையும் இமிடேட் செய்து நடிக்க நான் முயல்வதில்லை. நானாகவே அதில் தெரிய ஆசைப்படுகிறேன்.

ஆக்ஷன் ரீப்ளே படத்திலும் கூட எந்த பழைய நடிகையையும் நான் காப்பி அடிக்கவில்லை. நானேதான் அதில்தெரிந்தேன்.

70களில் உள்ள கதைக் களம் அது. அதற்கேற்ப மேக்கப், வசன உச்சரிப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளது. இது கடினமான படம் என்பதை படத்தை ஒப்புக் கொண்ட போதே உணர்ந்தேன். இருந்தாலும் என்னால் முடிந்தவரை செய்துள்ளேன்.

இது காமெடிப் படமாக இருந்தாலும் எனது நடிப்புத் திறமைக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன என்றார் ஐஸ்வர்யா ராய்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி