திரையுலகம் அமிதாப் பச்சனின் அட்டகாச மறு வருகை

அமிதாப் பச்சனின் அட்டகாச மறு வருகை

amithab01

மீண்டும் நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கம்பீரக் குரல் காற்றில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. கோன் பனேகா குரோர்பதியின் 4ம் அத்தியாம் சோனி டிவியில் தொடங்கியுள்ளது.

கோன் பனேகா குரோர்பதி-4வது தொடரின் முதல் பகுதி சோனி டிவியில் ஒளிபரப்பானது. இதை அமிதாப் பச்சனின் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

வெறும் குவிஸ் மாஸ்டராக மட்டும் இல்லாமல், போட்டியாளர்களின் குடும்பப் பின்னணி, பொது அறிவை வளர்க்க அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நடத்துகிறார் அமிதாப்.

கோன் பனேகா குரோர்பதியின் முதல் இரு பாகங்களை அமிதாப் நடத்தினார். 3வது பாகத்தை ஷாருக் கான் நடத்தினார். ஆனால் அமிதாப் பச்சன் அளவுக்கு ஷாருக்கானின் குரோர்பதி நிகழ்ச்சி இல்லை என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில் தற்போது 4வது அத்தியாயத்திற்கு மீண்டும் வந்துள்ளார் அமிதாப் பச்சன்.

மீண்டும் அமிதாப் பசச்சின் கை பட்டு மிளிரத் தொடங்கியுள்ள கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி புதிய உயரத்தை எட்டும் என்று நிழ்ச்சி அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதல் நிகழ்ச்சியை கோலாகலமான கொண்டாட்டத்துடன் நடத்தினர். இதில் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமிதாப் பச்சனின் பிறந்த நாளன்று முதல் எபிசோட் ஒளிபரப்பானதால் அனைவரும் அமிதாப்புக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதே நேரத்தில்தான் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது.

அமிதாப்பின் முதல் எபிசோடுக்கு டிஆர்பி தர வரிசையி்ல் 5 சதவீத புள்ளிகள் கிடைத்துள்ளனவாம். அதேசமயம்,நேற்று ஒளிபரப்பான சல்மான் கான் நிகழ்ச்சிக்கு 3.4 சவீதமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி