திரையுலகம் கணவன் மனைவி வாழ்க்கை போரடிக்கிறது…

கணவன் மனைவி வாழ்க்கை போரடிக்கிறது…

thirutu siriki

“உலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது ரொம்ப கஷ்டம். குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் கணவனுக்கும் மனைவிக்கும் வாழ்க்கை போரடித்துவிடுகிறது. வேறு துணை தேடுகிறது..”

-ஏதோ பிரபு தேவா – ரம்லத் கதையைச் சொல்வதாக நினைக்க வேண்டாம். இது ‘திருட்டுச் சிறுக்கி’யின் கதை!

திருட்டுச் சிறுக்கி?

ஆம்…. தமிழில் தயாராகும் புதிய படம் ஒன்றின் கதைதான் இது. இந்தப் படத்தில் போஜ்புரி மொழிப் படங்களில் பிரபலமான நடிகை ராணி சதுர்வேதி நாயகியாக அறிமுகமாகிறார்.

எஸ்.எஸ்.எ ஆர்ட் மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.கே.நாயர் அதிக பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் இது.

விவின் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க, இவர்களுடன் அஜய், ‘மலேசியா ஷகிலா’ எனப்படும் ஜெனிபர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

“சமகால வாழ்க்கை முறையில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழும் கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது வெறும் பகல் கனவாகவே அமைகிறது. பணம்,காசு சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி குடும்ப பாசம், உறவுகள் இவைதான் ஒரு மனிதனுடைய முழுமையான வாழ்க்கையை முடிவு செய்கிறது” என்ற கருத்தை கவிதை மாதிரி சொல்லியிருக்கிறோம் என்கிறார் அறிமுக இயக்குநர் அகிலன்.

கொடைக்கானல்,சென்னை,பாண்டிச்சேரி ஆகிய நகரங்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய இனியவன் இசையமைக்க, பாடல்களை டாக்டர் கிருதயா எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பு வி கே சுந்தர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி