செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கேட்ச் பிடிக்க முயன்றபோது மோதிக்கொண்டதால் கிரிக்கெட் வீரர் மரணம்!…

கேட்ச் பிடிக்க முயன்றபோது மோதிக்கொண்டதால் கிரிக்கெட் வீரர் மரணம்!…

கேட்ச் பிடிக்க முயன்றபோது மோதிக்கொண்டதால் கிரிக்கெட் வீரர் மரணம்!… post thumbnail image
கொல்கத்தா:-கிளப் போட்டியின் போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்ற 20 வயதான கேஷ்ரி, மற்றொரு வீரருடன் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டார். இதனால் சுயநினைவு இழந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். நன்றாக தேறிவந்த அவருக்கு நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் இன்று காலை மரணமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ள கேஷ்ரியின் மரணத்திற்கு பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர். கேஷ்ரி மரணமடைந்தது எதிர்பாராத நிகழ்வு. சாதனை படைக்கக்கூடிய வீரரான அவர், இவ்வாறு மரணமடைந்ததை ஜீரணிக்கமுடியவில்லை என மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் இணை செயலாளரான சபீர் கங்குலி தெரிவித்துள்ளார். பவுன்சர் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியுக்ஸ் மரணமடைந்த 4 மாதங்களுக்குள் மற்றொரு இளம் கிரிக்கெட் வீரர் மரணமடைந்துள்ளது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி