அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஓய்வுக்கு பின் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி!…

ஓய்வுக்கு பின் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி!…

ஓய்வுக்கு பின் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி, தனக்கு ஓய்வு வேண்டும் என்று கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். சோனியாவும் ராகுலின் ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராகுல் ஓய்வெடுக்க சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது ரகசியமாக இருந்த நிலையில், ராகுல் நாட்டில் இல்லாதது குறித்து பலரும் கிண்டல் செய்து வந்தனர். நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக நாட்டில் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர் ஓய்வு எடுக்க சென்றது தவறு என காங்கிரஸ் கட்சியினரே அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில் ஓய்வெடுக்க சென்ற 58 நாட்களுக்கு, பின் இன்று காலை 11.15 மணியளவில் தலைநகர் டெல்லியில் தரையிறங்கினார் ராகுல். பாங்காக்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் வந்திறங்கிய அவர், துக்லக் லேனில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார். அப்போது ஏற்கனவே அங்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகள் பிரியங்கா ஆகியோர் ராகுலை அன்புடன் வரவேற்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி