அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!… post thumbnail image
பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகை நிலவி வந்தது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, பகையை முடிவுக்கு கொண்டு வந்தார். இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படும் வாய்ப்புகள் கனிந்துள்ளன.

இந்த நிலையில் பனாமா சிட்டியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், கியூபா வெளியுறவு மந்திரி புருனோ ரோட்ரிகியூசும் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
1958-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விரு நாடுகள் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பது இதுவே முதல் முறை. இரு தலைவர்களும் கை குலுக்கிக்கொண்ட புகைப்படத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் வெளியிட்டது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவும் நேற்று பேச்சு வார்த்தையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி