செய்திகள் இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!…

இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!…

இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!… post thumbnail image
லக்னோ:-இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக்கொன்ற இருவருக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இங்குள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு 30 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பசு மாட்டின் தோலை கைப்பற்றினர்.

இது தொடர்பாக, பசுவதை தடை சட்டத்தின் கீழ், முசாபர் நகர் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ரியாஸத், நஸிம் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மனோஜ் குமார் உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி