அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார் – கமல்நாத்!…

வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார் – கமல்நாத்!…

வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார் – கமல்நாத்!… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் அடுத்தடுத்து படுதோல்விகள் அடைந்ததால் ராகுல் காந்தி மிகவும் விரக்தி அடைந்தார். இதனால் அவர் விடுமுறை எடுத்து, வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பது வெளியிடப்படவில்லை. ராகுல் காந்திக்கு அடுத்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக அவர் தன்னை தயார் படுத்திக்கொள்ளவே வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே காங்கிரஸ் நிர்வாகத்தில் பெரிய மாற்றங்களை ராகுல் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி இன்று டெல்லி திரும்புவார் என்று ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதை காங்கிரஸ் மறுத்தது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் கூறுகையில், ராகுல்காந்தி இன்னும் 5 நாட்களில் இந்தியா திரும்புவார் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி