அரசியல்,செய்திகள் முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்…

முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்…

முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்… post thumbnail image
பரிதாபாத் :- அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், பரிதாபாத் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று பயணிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காதது அனைவரின் புருவத்தையும் உயர வைத்தது.

இதனால் ஆச்சர்யமடைந்த பயணிகள், நீங்கள் எல்லாம் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தன்னார்வலர்களா என்று கேட்க, ‘நாங்கள் ஆம் ஆத்மி கட்சியில் இல்லை. ஆனால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்று ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அட்டோ ரிக்‌ஷா தொழிலாளர் தலைவர் சீதாராம் கூறுகையில், “டெல்லியில் ஓட்டுவதற்கு என்.சி.ஆர் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கும் வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி