செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் இஷாந்த் ஷர்மா – புவனேஸ்வர் குமார் ஆடுவது சந்தேகம்!…

உலக கோப்பையில் இஷாந்த் ஷர்மா – புவனேஸ்வர் குமார் ஆடுவது சந்தேகம்!…

உலக கோப்பையில் இஷாந்த் ஷர்மா – புவனேஸ்வர் குமார் ஆடுவது சந்தேகம்!… post thumbnail image
புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் தேதி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. மார்ச் 29ம் தேதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணி காயத்தால் சிக்கி தவிக்கிறது. 3 நாடுகள் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரோகித்சர்மா காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் எஞ்சிய ஆட்டம் எதிலும் விளையாடவில்லை. இதேபோல் வேகப்பந்து வீரர் இஷார்ந்த் சர்மாவும் காயத்தில் இருப்பதால் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

இதேபோல அணிக்கு மீண்டும் திரும்பிய ரவிந்திர ஜடேஜா, புவனேஸ்வர்குமார் ஆகியோரும் முழு உடல் தகுதியுடன் இல்லை. இவர்களுக்கு வருகிற 7ம் தேதி உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது. இதற்கிடையே வேகப்பந்து வீரர்களான இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகமே. இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இருவரும் முழுமையான உடல் தகுதியுடன் இல்லை. மிகப்பெரிய போட்டிக்கு காயம் அடைந்த வீரர்களை அனுமதிப்பது இல்லை என்பதில் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது. ரோகித் சர்மாவும், ரவிந்திர ஜடேஜாவும் உடல் தகுதி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இஷார்ந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் இந்த இருவருக்கும் பதில் மாற்று வீரர் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் மொகித்சர்மா பெயர் முதலில் இருக்கிறது. அவரும் குல்கர்னியும் 3 நாடுகள் போட்டி முடிந்த பிறகு நாடு திரும்பவில்லை. அங்கேயே தங்கி இருக்குமாறு ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி