செய்திகள்,திரையுலகம் அஜீத் ரசிகர்களால் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகர் அருண் விஜய்!…

அஜீத் ரசிகர்களால் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகர் அருண் விஜய்!…

அஜீத் ரசிகர்களால் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகர் அருண் விஜய்!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இன்று அதிகாலை ஷோவை தியேட்டரில் பார்ப்பதற்காக சென்ற அருண் விஜய் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து தியேட்டரிலேயே கண் கலங்கி அழுதார்.

தடையற தாக்க திரைப்படத்தில் கிடைக்காத அங்கீகாரம், எனக்கு தல படத்தில் கிடைத்துவிட்டது என்று உணர்ச்சி பொங்க கூறினார் அருண் விஜய். மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அஜித் சாருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. திரையில் எனக்கு போதிய அளவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த வெற்றி அஜித் இல்லாமல் சாத்தியமில்லை என்றும், எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த கவுதம் மேனனுக்கு பெரிய நன்றி என்றும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி