செய்திகள்,விளையாட்டு இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லை – ஹர்பஜன்சிங்!…

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லை – ஹர்பஜன்சிங்!…

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லை – ஹர்பஜன்சிங்!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங். 222 ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த உலககோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:–

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகளுக்கு பந்து வீச்சாளர்கள் தான் காரணம். பவுலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால் தான் இந்திய வீரர்களால் நேர்த்தியுடன் பந்துவீச முடியவில்லை. எந்த ஒரு இந்திய பவுலரும் ஆஸ்திரேலியாவில் 6 பந்தையும் சரியான இலக்கில் வீசியது கிடையாது. இதற்கு முறையான பயிற்சியின்மைதான் காரணம்.

முகமதுஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் திறமையான வேகப்பந்து வீரர்கள் தான். ஆனால் அவர்களால் நேர்த்தியுடன் பந்துவீச முடியவில்லை. பயிற்சியில் முழுமையாக செய்ய முடியாவிட்டாலும் கொஞ்சம் மாற்றிவிடலாம்.நான் பந்து வீசிய பேட்ஸ்மேன்களில் பாகிஸ்தான் வீரர்கள் இன்சமாம், சயீத் அன்வரை அவுட் செய்ய முடியாமல் திணறினேன். எனக்கு இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு எதுவும் வரவில்லை. அப்படி வெளியான தகவல் தவறானது. நான் இந்திய அணியில் விளையாடாவிட்டாலும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி