செய்திகள்,திரையுலகம் யுஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

யுஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

யுஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. கடந்த பொங்கலுக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது, படத்தின் தணிக்கை எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. தியேட்டர்களிலும் டிக்கெட் விற்பனை தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்திருந்தனர். யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. எனவே, படத்தை மறு தணிக்கைக்கு படக்குழுவினர் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘யுஏ’ சான்றிதழுடனேயே படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும், படம் 176 நிமிடங்கள் 45 நொடிகள் நீளம் கொண்டதாக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி