டாஸ் வென்ற தெலுங்கு வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை ரைனோஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. விக்ராந்த் 23 ரன்களும், சாந்தனு 21 ரன்களும், விஷ்ணு 21 ரன்களும் எடுத்தார்கள். இதனைத் தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தெலுங்கு வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சச்சின் ஜோசி 37 ரன்களும், சுதிர் 35 ரன்களும், அகில் 32 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் தெலுங்கு வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி