அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…

சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…

சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!… post thumbnail image
புதுடெல்லி:-சசிதரூரின் மனைவியான சுனந்தா டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வருடத்துக்கு பின்னர், மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை டெல்லி போலீசார் கொலை வழக்காக மாற்றி புதிய கோணத்தில் விசாரணையை தொடங்கினர். இதற்காக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினர் கடந்த சில நாட்களாக பலரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் சுனந்தா கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு சசி தரூருக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி