செய்திகள் இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!…

இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!…

இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!… post thumbnail image
புதுடெல்லி:-கடந்த மாதம் 5ம் தேதி இரவு டெல்லியில் கால் டாக்சியில் பயணம் செய்த 25 வயது பெண்ணை கார் டிரைவர் தாக்கி கற்பழித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உபேர் கால் டாக்ஸி நிறுவனத்தைச் சேர்ந்த டிரைவர் ஷிவ் குமார் யாதவை கைது செய்தனர். இந்த வழக்கு டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் நடந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் டெல்லி கோர்ட்டுக்கு சென்று வாக்கு மூலம் அளித்தார். மாஜிஸ்திரேட்டு ரியா குகாவின் அறைக்கு சென்று அவர் முன் வாக்கு மூலம் அளித்தார். மாஜிஸ்திரேட்டு அறையில் இருந்து வெளியே வந்த இளம் பெண் மற்றொரு அறையில் இருந்து வெளியே வந்த டிரைவர் ஷிவ் குமாரைப் பார்த்து இந்தப் பேய் தான் என்னை சீரழித்தது என்று அலறினார்.

சம்பவம்பற்றி கோர்ட்டில் போலீசார் 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் பாதிக்கப்பட்ட பெண், ஷிவ் குமாரைப் பார்த்து அலறிய தகவல் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவ்குமார் யாதவின் செயலுக்குப் பின் டெல்லியில் உபேர் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி