செய்திகள்,திரையுலகம் வேதாளக் கோட்டை (2015) திரை விமர்சனம்…

வேதாளக் கோட்டை (2015) திரை விமர்சனம்…

வேதாளக் கோட்டை (2015) திரை விமர்சனம்… post thumbnail image
கேம்லட் ராஜ்ஜியத்தின் அரசனான ஆர்தர் தனது வளர்ப்பு மகனான சர் கலாஹத்திடம் அவனது உண்மையான தந்தை சர் லான்ஸ்லட்டை கண்டுபிடிக்க சொல்லிவிட்டு மரணத்தை தழுவுகிறார்.ஆர்தரின் மரணத்திற்கு பின் தீய சக்தியின் மொத்த உருவமான அவரது சகோதரி மோர்கன் மூன்று டிராகன்களை வைத்துக்கொண்டு கேமலட் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி நாட்டு மக்களை சித்ரவதை செய்கிறாள். மோர்கனின் அட்டகாசங்கள் எல்லை மீறி செல்லும் நிலையில், அவளது கொடுமையிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற தனது தந்தையான லான்ஸ்லெட்டால் மட்டுமே முடியும் என்பதால் அவளது அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது தந்தையை தேடி புறப்படுகிறான் கலாஹத்.

அந்த தேடுதலில் அவனுக்கு பல வகைகளில் மோர்கன் தொல்லை கொடுக்கிறாள். இதனால் தந்தையை தேடும் கலாஹத்தின் முயற்சிக்கு தடை ஏற்படுகிறது. இந்நிலையில் கலாஹத்துக்கு சிலர் உதவ முன்வருகிறார்கள்.அந்தக் குழுவில் உள்ள ஒரு பெண்ணை கலாஹத் காதலிக்கிறான். இவர்கள் அனைவரும் இணைந்து லான்ஸ்லட்டை தேடி புறப்படுகிறார்கள். அவர்களுக்கும் மோர்கன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறாள்.இறுதியில், இந்த தடைகளையெல்லாம் மீறி கலாஹத் தனது தந்தையை கண்டுபிடித்தானா?, ராஜ்ஜியத்தை மோர்கனிடமிருந்து மீட்டானா? இல்லையா? என்பதே மீதிக்கதை. சரித்திரப் படங்களுக்கு முக்கியத் தேவையான அரசர் கால உடைகள் இப்படத்தில் அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. தீய சக்தியான மோர்கன் பாறையின் மீது வாளால் மந்திரத்தை எழுதி டிராகனை எழுப்புவது, டிராகன்களின் தாக்குதல் போன்ற காட்சிகள் கிராபிக்ஸ் என்பதை மறந்து நம்மை ரசிக்க வைத்தாலும், படத்தில் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை.

இதுபோன்ற கதைக்களத்தில் நாம் ஏற்கனவே நிறைய ஹாலிவுட் படங்களைப் பார்த்துள்ளதால், சில காட்சிகளை தவிர அடுத்து நடக்கப்போவது அனைத்தையும் நம்மால் யூகிக்கி முடிகிறது. இதுவே படத்திற்கு பெரும் பலவீனம்.மேலும் காட்சிகளின் நம்பகத்தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. உதாரணமாக டிராகன் மலையை விட்டு வெளியேறும் காட்சியில் அதன் வயிற்றில் ஏற்படும் நிற மாற்றங்கள், சக்திமான் தொடரில் வருவதுபோல் வாளை மேலே தூக்கினால் பச்சை கலரில் மின்னுவது போன்ற காட்சிகள் அடிக்கடி ‘அவதார்’ படத்தை பார்த்த நம் தமிழ் ரசிகர்களுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.
மக்கள் தற்போதும் பேண்டஸி வகைத் திரைப்படங்களை விரும்புகிறார்கள் என்பது உண்மை தான் ஆனால் அந்த பேண்டஸியிலும் ஒரு யதார்த்தமும் நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதைத்தான் இந்த படத்திலும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மொத்தத்தில் ‘வேதாளக் கோட்டை’ பிரம்மாண்டம்…………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி