செய்திகள்,திரையுலகம் நடிகர் சல்மான் கான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!…

நடிகர் சல்மான் கான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!…

நடிகர் சல்மான் கான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டின் நடிகர் சல்மான் கான் வெள்ளித்திரையில் டாப்பாக இருந்தாலும் சின்னத்திரையிலும் பங்கேற்று வருகிறார். குறிப்பாக அவர் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரபலம். பிக்பாஸ் இப்போது எட்டாவது சீசனாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது நடந்து வரும் சீசன் 8 நிகழ்ச்சி 2015 ஜனவரி 4ம் தேதி வரை நடக்க இருந்தது. இப்போது அதை மேலும் சில வாரங்கள் அதிகரித்துள்ளன.

இது மகிழ்ச்சியான விஷயம் தானே, இதில் என்ன ஷாக் என நீங்கள் கேட்கலாம்… ஜன 4ம் தேதிக்கு பிறகு பிக்பாஸ்-8 நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கமாட்டார். அவருக்கு பதிலாக பிரபல இயக்குநர் பராகான் முன்நின்று நடத்த இருக்கிறார். சல்மான் தனது அடுத்தடுத்த படங்களின் பிஸியால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவரால் நடத்த முடியவில்லை, அதனாலேயே பராகான் மாற்றப்பட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி