செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை போட்டியில் 5வது முறையாக ஆடும் ஜெயவர்த்தனே, அப்ரிடி!…

உலக கோப்பை போட்டியில் 5வது முறையாக ஆடும் ஜெயவர்த்தனே, அப்ரிடி!…

உலக கோப்பை போட்டியில் 5வது முறையாக ஆடும் ஜெயவர்த்தனே, அப்ரிடி!… post thumbnail image
துபாய்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் விளையாடும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஜெயவர்த்தனே, அப்ரிடி. இருவரும் 5–வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறார்கள் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்து உள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான ஜெயவர்த்தனேவும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான அப்ரிடியும் இந்த உலக கோப்பைக்கான 30 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளனர். இருவரும் 15 பேர் கொண்ட அணியிலும் இடம்பெறுவார்கள். இதன்மூலம் அவர்கள் 5–வது உலக கோப்பையில் விளையாடும் பெருமையை பெறுவார்கள். 1999–ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து அவர்கள் தொடர்ந்து (2003, 2007, 2011) விளையாடி வருகிறார்கள். இதில் ஒரு முறை கூட இருவரும் தங்கள் அணிக்காக கோப்பையை பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த முறை இருவரும் உலக கோப்பையை பெற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த ஜாவித் மியான்டட், தெண்டுல்கர் ஆகியோர் தான் அதிகபட்சமாக 6 உலக கோப்பையில் விளையாடி உள்ளனர். மியான்டட் 1975, 1979, 1983, 1987, 1992, 1996 ஆகிய உலக கோப்பையிலும், தெண்டுல்கர் 1992, 1996, 1999, 2003, 2007, 2011, ஆகிய உலக கோப்பையிலும் விளையாடி உள்ளார். இதில் 1992–ல் பாகிஸ்தானும், 2011–ல் இந்தியாவும் உலக கோப்பையை வென்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி