செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு விராட் கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர்: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!…

விராட் கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர்: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!…

விராட் கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர்: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!… post thumbnail image
அடிலெய்டு:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது, ஆஸ்திரேலிய அணி தனது நேற்றைய ஸ்கோரான 517 ரன்களுடன் டிக்ளேர் செய்துகொண்டது. இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும், விஜயும் களமிறங்கினர். விஜய் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினாலும் பின்னர் சுதாரித்துகொண்டு ஆட ஆரம்பித்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடினார். எனினும் 25 ரன் எடுத்திருந்தபோது ஹாரிஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதனால் 3வது விக்கெட்டுக்கு புஜாரா களமிறங்கினார். விஜய்-புஜாரா ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தது. ஹாரிஸ் வீசிய 27வது ஓவரில் விஜய் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். சிறிது நேரத்திலேயே ஜான்சன் வீசிய 31வது ஓவரின் முதல் பந்தில் 53 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 111 ஆக இருந்தது.

இதனால் இந்திய அணியின் கேப்டன் கோலி 4வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். தனது முதல் பந்தை எதிர்கொள்ள கோலி தயாரானார். அப்போது ஜான்சன் வீசிய பவுன்சர் பந்து நேராக கோலியின் ஹெல்மட்டை தாக்கியது. உடனடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியின் அருகே ஓடிச்சென்றனர். அந்த அணியின் வீரர்களான வார்னர், ஹாடின் மற்றும் பந்துவீச்சாளர் ஜான்சன் ஆகிய மூவரும் கோலியிடம் சென்று அவர் நலம் தானா என்று விசாரித்தனர்.இந்த கட்டத்தில் பந்துவீச்சாளர் ஜான்சன் தான் சற்று பதற்றமாக காணப்பட்டார். ஆனால் கோலியோ தனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என்று அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாரானார். இன்று காலை 9 மணி நிலவரப்படி இந்திய அணி 48 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 188 குவித்து விளையாடி வருகிறது. புஜாரா 73 ரன்களுடனும், கோலி 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி