செய்திகள்,திரையுலகம் நடிகைகள் சமந்தா-திரிஷா மீது நடிகர்கள் வருத்தம்!…

நடிகைகள் சமந்தா-திரிஷா மீது நடிகர்கள் வருத்தம்!…

நடிகைகள் சமந்தா-திரிஷா மீது நடிகர்கள் வருத்தம்!… post thumbnail image
சென்னை:-சமந்தா, தமன்னா போன்றவர்கள் தூய்மை திட்டத்தில் பங்கேற்றாலும் தங்களது சார்பில் யாரையும் முதலில் நியமிக்கவில்லை. பின்னர் சமந்தா, நடிகை திரிஷாவை பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சென்னையில் திரிஷா தனது சகாக்களுடன் சென்று குப்பையை சுத்தம் செய்துவிட்டு விஷால், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோரை இத்திட்டத்தில் பங்கேற்க நியமித்தார்.

திரிஷா, சமந்தா, தமன்னா மூவருமே டோலிவுட்டில்தான் நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் அங்குள்ள ஹீரோக்கள் யாரையுமே மூவரில் ஒருவர் கூட இத்திட்டத்தில் பங்கேற்க அழைக்கவில்லையாம். இந்த வருத்தம் டோலிவுட் ஸ்டார்கள் மனதில் மட்டுமல்ல ரசிகர்கள் மனதிலும் ஏற்பட்டிருக்கிறதாம். கோலிவுட் நடிகர்களை அழைத்த இவர்கள் டோலிவுட் நடிகர்களை புறக்கணித்தது நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி