செய்திகள்,திரையுலகம் இனி கத்தியில் லைகா உண்டு – எதிர்ப்பவர்களுக்கு தண்டனை!…

இனி கத்தியில் லைகா உண்டு – எதிர்ப்பவர்களுக்கு தண்டனை!…

இனி கத்தியில் லைகா உண்டு – எதிர்ப்பவர்களுக்கு தண்டனை!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கதை காப்பியில் ஆரம்பித்து, தயாரிப்பு நிறுவனம் வரை பிரச்சனையாகவே இருந்தது. இப்படத்தில் லைகா பெயரை நீக்க வேண்டும் என்று சில தமிழ் அமைப்புகள் படம் வெளியாவதற்கு முன் வழக்கு தொடுத்தனர்.

தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, படம் சென்ஸார் செய்த பிறகு யாரும் மதம், மொழி, ஜாதியை காரணம் காட்டி தடைக்கோர கூடாது. மேலும் லைகாவிற்கு மக்கள் தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை, மக்களை பார்க்கவேண்டாம் என்று கூறியும் அந்த இயக்கம் போராடவில்லை. அதனால் இது போன்ற வழக்குகளை இனி நீதிமன்றம் வரவேற்காது. இனி அந்த நிறுவனத்தின் பெயரை படத்தில் பயன்படுத்தலாம். மீறி அவர்களை தொந்தரவு செய்பவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி