செய்திகள்,முதன்மை செய்திகள் நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்!…

நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்!…

நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்!… post thumbnail image
பெங்களூரு:-பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இதுகுறித்த வழக்கு ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு ராமநகர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சாமியார் மற்றும் அவரது சீடர்கள் 5 பேர் ஆஜரானார்கள்.

சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஷ் தலைமையிலான குழுவினர் நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில், நித்யானந்தா நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் உறவு கொள்வதற்கான அனைத்து திறனும் அவரிடம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை அறிக்கையை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

இந்த அறிக்கையின் ஒரு நகல் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கைக்கு நித்யானந்தா சார்பில் ஆஜராக வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். குரல் சோதனை அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி