செய்திகள்,திரையுலகம் 28 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ள நடிகை ஸ்ரீதேவி!…

28 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ள நடிகை ஸ்ரீதேவி!…

28 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ள நடிகை ஸ்ரீதேவி!… post thumbnail image
சென்னை:-70களின் இறுதியிலிருந்து 80களின் மத்தியில் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதேவி. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருவடனும் எவ்வளவோ படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டிய ஜோடிகளாகவே அவர்கள் இருந்தார்கள். ஸ்ரீதேவி தமிழில் கடைசியாக நடித்த படம் நான் அடிமை இல்லை. ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரீதேவி நடித்த அந்தப் படம் 1986ம் ஆண்டு வெளிவந்தது.

83க்குப் பிறகே தமிழ்ப் படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமே சுமார் 125 படங்களுக்கும் மேல் நடித்தவர் ஸ்ரீதேவி. தற்போது, 28 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பமான இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, மகாராணி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் கதையைக் கேட்டதுமே ஸ்ரீதேவி நடிக்க சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். ஸ்ரீதேவியை மகாராணியாக மிகவும் அழகாக காட்டுவதற்கென்றே தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறார்களாம்.

ஸ்ரீதேவியின் ஆடை அலங்கார வடிவமைப்பை பிரபல நிபுணரான மனீஷ் மல்கோத்ரா செய்கிறார். எந்திரன் படத்திற்குப் பிறகு தமிழில் அவர் பணிபுரியும் படம் இது. ஃபேன்டஸி கதையான இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் என்றும், ஹன்சிகாவிற்கு அம்மாவாக நடிக்கிறார் என்றும் இருவேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. எப்படி இருந்தாலும் ஸ்ரீதேவி நடிக்கும், அம்மா கதாபாத்திரத்திற்கே அள்ளி அள்ளி செலவு செய்கிறார்கள் என்றும் சொல்லி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி