பிரிஸ்பேன்:-பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, இந்தியா-ஜப்பான் இடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடிக்கு ஷின்ஸோ அபே விருந்து அளித்தார். சமீபத்தில் ஜப்பானுக்கு சென்றபோது மோடிக்கும் அபேவுக்கும் இடையில் பூத்த நட்பின் அடையாளமாக இந்திய பிரதமர் மோடிக்கு இந்த விருந்தினை ஷின்ஸோ அபே அளித்ததாக ஜப்பான் ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இந்த விருந்தில் பங்கேற்ற மோடி, மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அபேவிடம் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி