செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு!…

பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு!…

பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு!… post thumbnail image
சென்னை:-ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் எருமைப்பால் லிட்டருக்கும் 4-ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 23 ல் இருந்து ரூ 28 ஆக உயர்த்தப்படுவதாகவும் எருமைப்பால் கொள்முதல் விலை 31 ல் இருந்து 35 ல் ஆக உயர்த்தப்படுவதாகவும் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

அதேபோல், சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலை ரூ 10 உயர்த்தப்பட்டுள்ளது. சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலை ரூ 24 ல் இருந்து 34 ஆக உயர்த்தப்படுவதாக முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலை உயர்வு நவம்பர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி